Pages

Sunday, June 5, 2011

சுமைகள் சுகமாய்

தன் துணையை இழந்து
இல்லாமையால் உறவுகள் பிரிந்து
ஒற்றை கைக்குழந்தை சுமந்துகொண்டு
பல பேச்சுகளையும் இச்சைகளையும் எதி்ர்கொண்டு
கால் வயிற்று கஞ்சியிலும் ஒரு சந்தோஷம் இவளுக்கு
கூலி வேலை மட்டுமே செய்ய தெரிந்த கிராமச்சி
ஓய்வு என்பதை மறந்த ஒரு ஜடம்
உழைத்து கொண்டே இருக்கும் இவள்
தன் மகனை ஒரு நாளும் பட்டினியிட்டதில்லை
இவள் ஒரு நாளும் புதிய ஆடைகள் உடுத்தியதில்லை
கிராமத்தை தாண்டி வேறஎங்கேயும் சென்றதில்லை
தினக்கூலியை ஒரு நாளும் தவறிவிட்டதில்லை
போரட்டங்களும் வலிகளும் பழகிய ஒன்று இவளுக்கு
தனக்காக எதையுமே நினைக்காத இவள்
மகள் சம்பாதித்து கொண்டு வந்தான்
அன்று இவள் நிறைவாய் ஓய்வொடுத்து கொண்டாள்
இந்த உலகத்தை விட்டு...........

No comments:

Post a Comment